Skip to content

யெகோவாவின் சாட்சிகள், முன்பு தங்கள் சபை அங்கத்தினர்களாக இருந்தவர்களை ஒதுக்கித் தள்ளுகிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள், முன்பு தங்கள் சபை அங்கத்தினர்களாக இருந்தவர்களை ஒதுக்கித் தள்ளுகிறார்களா?

 ஞானஸ்நானம் பெற்ற யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இப்போது ஊழியத்தில் ஈடுபடாமல், சொல்லப்போனால் சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவுகொள்ளாமல் விலகி சென்றாலும் நாங்கள் அவர்களை ஒதுக்கித் தள்ளுவதில்லை. உண்மையைச் சொன்னால், நாங்களே அவர்களைச் சந்தித்து அவர்களுடைய ஆன்மீக ஆர்வத்தை மீண்டும் துண்டிவிட முயற்சி செய்கிறோம்.

 ஒருவர் மோசமான பாவம் செய்துவிட்டால்கூட அவரைச் சட்டென்று சபையிலிருந்து நீக்கிவிட மாட்டோம். என்றாலும், ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் பைபிள் நெறிமுறைகளுக்கு விரோதமான செயல்களைத் திரும்பத் திரும்ப செய்து மனந்திரும்பாமல் போகும்போது அவர் ஒதுக்கித் தள்ளப்படுவார் அல்லது சபையிலிருந்து நீக்கப்படுவார். “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது.—1 கொரிந்தியர் 5:13.

 உதாரணத்துக்கு, கணவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவருடைய மனைவி, பிள்ளைகள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால் அப்போது என்ன? அவருக்குக் குடும்பத்தோடு இருந்த ஆன்மீக பிணைப்பு முறிந்துவிடும். ஆனால், அவருடைய குடும்ப பிணைப்பு முறியாது. திருமண பந்தமும், குடும்பத்தினரோடு இருக்கும் அன்பும் தொடரும்.

 சபைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் எங்கள் கூட்டங்களுக்கு வரலாம். அவர்கள் விரும்பினால், சபை மூப்பர்களை அணுகி ஆன்மீக உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நபரும் மீண்டும் யெகோவாவின் சாட்சி ஆவதற்கு உதவுவதே எங்கள் நோக்கம். சபைநீக்கம் செய்யப்பட்ட நபர் தன்னுடைய மோசமான நடத்தையை விட்டுவிட்டு பைபிள் நெறிமுறைகளின்படி வாழ தனக்கு ஆசை இருப்பதை செயலில் காட்டும்போது அவர் தாராளமாக மீண்டும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகலாம்.