எரேமியா 20:1-18

20  எரேமியா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனங்களை இம்மேரின் மகன் பஸ்கூர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் யெகோவாவின் ஆலயத்தில் குருவாகவும் தலைமை ஆணையராகவும் இருந்தார்.  எல்லாவற்றையும் கேட்ட பின்பு அவர் எரேமியாவைத் தடியால் அடிக்கவும், தொழுமரத்தில் மாட்டி வைக்கவும்+ உத்தரவு போட்டார். அந்தத் தொழுமரம் யெகோவாவின் ஆலயத்தில் ‘பென்யமீனின் உயர்ந்த நுழைவாசலுக்கு’ பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.  அடுத்த நாள், எரேமியாவை பஸ்கூர் விடுதலை செய்தார். அப்போது எரேமியா அவரிடம், “பஸ்கூர் என்ற உன் பெயரை மாகோர்மீசாபீப்*+ என்று யெகோவா மாற்றிவிட்டார்.  ஏனென்றால், ‘உன்னையும் உன் நண்பர்களையும் திகிலடைய வைப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘உன்னுடைய கண் எதிரிலேயே அவர்கள் எதிரிகளின் வாளுக்குப் பலியாவார்கள்.+ யூதா முழுவதையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுப்பேன். அவன் யூதா ஜனங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போவான், அவர்களை வாளால் வெட்டிச் சாய்ப்பான்.+  இந்த நகரத்தின் செல்வங்கள், வளங்கள், விலைமதிப்புள்ள பொருள்கள், ராஜாக்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றையுமே எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.+ அவர்கள் அவற்றையெல்லாம் கைப்பற்றி பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.+  பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் இருக்கிற எல்லாரும் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள். நீ அங்கே போய் செத்துப்போவாய். உன்னுடைய எல்லா நண்பர்களோடும் சேர்த்து அங்கே புதைக்கப்படுவாய். ஏனென்றால், நீ அவர்களிடம் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொன்னாய்’”+ என்றார்.   யெகோவாவே, என்னை ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!* உண்மையிலேயே ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்!* உங்கள் பலத்தால் என்னை ஜெயித்துவிட்டீர்கள்!+ கடவுளே, எல்லாரும் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்.நாள் முழுவதும் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறார்கள்.+   நான் எப்போதுமே அவர்களிடம்,“நகரம் நாசமாகப்போகிறது! அழிவு வரப்போகிறது!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. யெகோவாவே, உங்களுடைய செய்தியைச் சொல்வதால் ஜனங்கள் என்னை நாள் முழுவதும் கிண்டல் செய்துகொண்டே இருக்கிறார்கள்; என்னைக் கண்டபடி பேசுகிறார்கள்.+   அதனால், “இனி உங்களைப் பற்றிப் பேசவே கூடாது,உங்களுடைய பெயரைச் சொல்லவே கூடாது”+ என்று நினைத்தேன். ஆனால், உங்களுடைய செய்தியைச் சொல்லாமல் என் நெஞ்சுக்குள் அடைத்து வைத்தபோது,எரிகிற நெருப்பை என் எலும்புகளுக்குள் அடைத்து வைத்தது போல உணர்ந்தேன். அதை அடக்கி அடக்கி சோர்ந்துபோனேன்.அந்த அவஸ்தையை அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.+ 10  எனக்கு ஒரே திகிலாக இருந்தது.+ஏனென்றால், ஜனங்கள் என்னைப் பற்றி ஏதேதோ பேசுவது என் காதில் விழுந்தது. “அவனைக் கண்டிக்கலாம்! எல்லாரும் போய் அவனைக் கண்டிக்கலாம்!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள். எனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்கூட* என்னுடைய வீழ்ச்சிக்காகக் காத்திருந்தார்கள்.+ “இவன் ஏதாவது மடத்தனமாகச் செய்யாமலா போய்விடுவான்? அப்போது இவனை மடக்கிப்பிடித்துப் பழிவாங்கிவிடலாம்” என்று பேசிக்கொண்டார்கள். 11  ஆனால் யெகோவாவே, மிரள வைக்கும் ஒரு மாவீரரைப் போல நீங்கள் என்னோடு இருந்தீர்கள்.+ அதனால்தான், என்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் சறுக்கி விழுந்தார்கள், தோற்றுப்போனார்கள்.+ அவர்கள் ஜெயிக்கவே மாட்டார்கள். வெட்கப்பட்டும் கேவலப்பட்டும்தான் போவார்கள். அவர்களுக்கு வரும் அவமானம் காலத்துக்கும் மறக்கப்படாது.+ 12  ஆனால், பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதிமான்களை சோதித்தறிகிறீர்கள்.இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+ என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.+என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.+ 13  யெகோவாவைப் புகழுங்கள்! யெகோவாவைப் போற்றிப் பாடுங்கள்! ஏனென்றால், எளியவனை அக்கிரமக்காரர்களின் கையிலிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். 14  என் தாய் என்னைப் பெற்றெடுத்த நாள் சாபக்கேடான நாளாகட்டும்!+ 15  என் அப்பாவிடம் வந்து, “உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!” என்று சொல்லி, அவரைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தவன் சபிக்கப்படட்டும்! 16  யெகோவா பாவம்பார்க்காமல் அழித்த நகரங்களைப் போல அவன் ஆகட்டும்! காலையில் அலறல் சத்தத்தையும் நடுப்பகலில் போர் முழக்கத்தையும் அவன் கேட்கட்டும்! 17  கருப்பையில் இருக்கும்போதே நான் ஏன் கொல்லப்படவில்லை?தாயின் வயிற்றிலேயே நான் சமாதி ஆகியிருக்கக் கூடாதா?என் தாய் என்னைப் பெற்றெடுக்காமலேயே இருந்திருக்கக் கூடாதா?+ 18  நான் இப்படிப் படாதபாடுபட்டும் கேவலப்பட்டும் சாவதற்காகவாஇந்த உலகத்தில் பிறந்தேன்?+

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “சுற்றிலும் திகில்.”
வே.வா., “முட்டாளாக்கிவிட்டீர்கள்.”
வே.வா., “முட்டாளாக்கிவிட்டீர்கள்.”
வே.வா., “என்னோடு சமாதானமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டவர்கள்கூட.”
நே.மொ., “சிறுநீரகங்களையும்.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகளையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா