சங்கீதம் 96:1-13
96 யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+
பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!+
2 யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழுங்கள்.
அவர் தரும் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியைத் தினம் தினம் அறிவியுங்கள்!+
3 அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்.அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.+
4 யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்.
மற்ற எல்லா தெய்வங்களையும்விட அதிக பயபக்திக்குரியவர்.
5 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்.+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+
6 மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன.+பலமும் அழகும் அவருடைய ஆலயத்தில் இருக்கின்றன.+
7 ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.*யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
8 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.+காணிக்கையோடு அவருடைய பிரகாரங்களுக்கு வாருங்கள்.
9 பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*பூமியெங்கும் உள்ளவர்களே, அவர் முன்னால் நடுநடுங்குங்கள்!
10 “யெகோவா ராஜாவாகிவிட்டார்!+
பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.
மக்களுக்கு அவர் நியாயமாகத் தீர்ப்பு கொடுப்பார்”+ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.
11 வானம் சந்தோஷப்படட்டும், பூமி பூரித்துப்போகட்டும்.கடலும் அதில் நிறைந்திருப்பவையும் முழக்கம் செய்யட்டும்.+
12 வயல்களும் அவற்றிலுள்ள அனைத்தும் ஆனந்தப்படட்டும்.+
அவற்றோடு சேர்ந்து காட்டு மரங்களெல்லாம் கடவுளுக்குமுன் சந்தோஷக் குரல் எழுப்பட்டும்.+
13 ஏனென்றால், யெகோவா வருகிறார்.*அவர் பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார்.
அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+மக்களுக்கு உண்மைத்தன்மையோடு* தீர்ப்பு கொடுப்பார்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்.”
^ நே.மொ., “பரிசுத்த அலங்காரத்தோடு.”
^ அல்லது, “யெகோவா பரிசுத்தத்தில் மகத்தானவராக இருப்பதால் அவரை வணங்குங்கள்.”
^ வே.வா., “வந்துவிட்டார்.”
^ வே.வா., “நம்பகத்தன்மையோடு.”