யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 13:1-18

13  பின்பு, அது* கடற்கரை மணலில் அசையாமல் நின்றது. அப்போது, மூர்க்க மிருகம்+ ஒன்று கடலிலிருந்து ஏறி வருவதைப் பார்த்தேன்.+ அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன; அதன் கொம்புகளில் பத்து மகுடங்கள் இருந்தன, ஆனால் அதன் தலைகளில் கடவுளை நிந்திக்கும் பெயர்கள் இருந்தன.  நான் பார்த்த அந்த மூர்க்க மிருகம் சிறுத்தையைப் போல் இருந்தது; ஆனால், அதன் கால்கள் கரடியின் கால்களைப் போல் இருந்தன, அதன் வாய் சிங்கத்தின் வாயைப் போல் இருந்தது. அந்த மிருகத்துக்கு வல்லமையையும் சிம்மாசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் ராட்சதப் பாம்பு+ கொடுத்தது.+  அதன் தலைகள் ஒன்றில் பயங்கரமான வெட்டுக்காயம் இருந்தது; ஆனால், சாவுக்குரிய அந்த வெட்டுக்காயம் குணமானது.+ பூமியிலிருந்த எல்லாரும் அதை வியந்து பாராட்டிக்கொண்டு அதன் பின்னால் போனார்கள்.  அந்த மூர்க்க மிருகத்துக்கு ராட்சதப் பாம்பு அதிகாரம் கொடுத்ததால் அந்த ராட்சதப் பாம்பை அவர்கள் வணங்கினார்கள்; அதோடு, “இந்த மூர்க்க மிருகத்தைப் போல் யார் இருக்கிறார்கள், இதனோடு யாரால் போர் செய்ய முடியும்?” என்று சொல்லி அந்த மூர்க்க மிருகத்தையும் வணங்கினார்கள்.  வீண்பெருமையையும் நிந்திக்கும் வார்த்தைகளையும் பேசுகிற வாய் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது; 42 மாதங்கள் தன்னுடைய இஷ்டப்படி செயல்பட அதற்கு அதிகாரமும் கொடுக்கப்பட்டது.+  கடவுளை நிந்திப்பதற்காக அது தன் வாயைத் திறந்தது; அவருடைய பெயரையும், அவருடைய குடியிருப்பையும், பரலோகத்தில் குடியிருக்கிறவர்களையும்+ அது நிந்தித்தது.+  பரிசுத்தவான்களோடு போர் செய்து அவர்களை ஜெயிக்க அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது;+ அதோடு, எல்லா கோத்திரத்தையும் இனத்தையும் மொழியையும் தேசத்தையும் சேர்ந்தவர்கள்மீது அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.  பூமியில் குடியிருக்கிற எல்லாரும் அதை வணங்குவார்கள்; உலகம் உண்டானதுமுதல் அவர்களில் யாருடைய பெயரும், வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டி+ வைத்திருந்த வாழ்வின் சுருளில்+ எழுதப்படவில்லை.  காதுள்ளவன் எவனோ அவன் கேட்கட்டும்.+ 10  சிறைபிடிக்கப்பட வேண்டியவன் எவனோ அவன் சிறைபிடிக்கப்படுவான். வாளால் கொல்கிறவன்* எவனோ அவன் வாளால் கொல்லப்படுவான்.+ அதனால்தான் பரிசுத்தவான்களுக்குச்+ சகிப்புத்தன்மையும்+ விசுவாசமும்+ தேவை. 11  பின்பு, வேறொரு மூர்க்க மிருகம் பூமியிலிருந்து எழுந்து வருவதைப் பார்த்தேன்; அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போன்ற இரண்டு கொம்புகள் இருந்தன; ஆனால், அது ராட்சதப் பாம்பைப் போல் பேச ஆரம்பித்தது.+ 12  அது முதலாவது மூர்க்க மிருகத்தின்+ முழு அதிகாரத்தையும் அதன் முன்னால் செயல்படுத்தியது. பின்பு, சாவுக்குரிய வெட்டுக்காயத்திலிருந்து குணமான+ முதலாவது மூர்க்க மிருகத்தைப் பூமியும் அதில் குடியிருக்கிறவர்களும் வணங்கும்படி செய்தது. 13  அது பெரிய அடையாளங்களைச் செய்தது; மனிதர்களின் கண் முன்னால் வானத்திலிருந்து நெருப்பு வந்து பூமியில் விழும்படியும் செய்தது. 14  முதலாவது மூர்க்க மிருகத்தின் முன்னால் செய்யும்படி அனுமதிக்கப்பட்ட அந்த அடையாளங்களின் மூலம் பூமியில் குடியிருக்கிறவர்களை அது மோசம்போக்கியது. அதோடு, வாளால் வெட்டப்பட்டும் பிழைத்துக்கொண்ட+ அந்த மூர்க்க மிருகத்தைப் போன்ற ஓர் உருவத்தை+ உண்டாக்கும்படி பூமியில் குடியிருக்கிறவர்களிடம் சொன்னது. 15  அந்த மூர்க்க மிருகத்தின் உருவத்தைப் பேச வைப்பதற்கும், அதை வணங்க மறுக்கிறவர்களைக் கொல்லும்படி செய்வதற்கும் அந்த உருவத்துக்கு உயிர்மூச்சு கொடுக்கும்படி இரண்டாவது மிருகத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 16  சிறியவர்கள், பெரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், அடிமைகள், சுதந்திர மக்கள் என எல்லாரும் தங்கள் வலது கையிலாவது நெற்றியிலாவது ஓர் அடையாளக் குறியைப் பெற்றுக்கொள்ளும்படி அது கட்டாயப்படுத்தியது.+ 17  அதோடு, அந்த மூர்க்க மிருகத்தின் பெயரையோ அந்தப் பெயரின் எண்ணையோ+ அடையாளக் குறியாகப்+ பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாதபடி செய்தது. 18  இதைப் புரிந்துகொள்வதற்கு ஞானம் தேவை: விவேகம் உள்ளவர்கள் அந்த மூர்க்க மிருகத்தின் எண்ணைக் கணக்குப் போட்டுப் பார்க்கட்டும்; அது ஒரு மனிதனுடைய எண்; அந்த எண் 666.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “ராட்சதப் பாம்பு.”
அல்லது, “வாளால் கொல்லப்பட வேண்டியவன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா