Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நம் ஜெபங்களை யெகோவா பொக்கிஷமாகப் பார்க்கிறார்

நம் ஜெபங்களை யெகோவா பொக்கிஷமாகப் பார்க்கிறார்

யெகோவா ஏற்றுக்கொள்ளும் ஜெபங்கள் அவருடைய ஆலயத்தில் அவர் முன்னால் தினமும் செலுத்தப்பட்ட வாசனையான தூபப்பொருள்போல் இருக்கின்றன. (சங் 141:2) யெகோவாவுக்கு நாம் நன்றி சொல்லும்போதும்... நம் அன்பைத் தெரிவிக்கும்போதும்... நம் கவலைகளை அவரிடம் கொட்டும்போதும்... நம் ஆசைகளைச் சொல்லும்போதும்... அவருடைய வழிநடத்துதலைக் கேட்கும்போதும்... அவருடன் இருக்கும் நட்பை எந்தளவு மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். கூட்டங்களில் எல்லார் முன்பும் செய்யப்படும் சுருக்கமான ஜெபங்களை நம் வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாக யெகோவா பார்க்கிறார் என்பது உண்மைதான். அதேசமயத்தில், நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில் நாம் மனம்திறந்து அவரிடம் பேசும்போது, அதுவும் நிறைய நேரம் பேசும்போது, அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்!—நீதி 15:8.

ஜெபத்துக்கு நான் அடிமை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதரர் ஜான்சனுக்கு என்னென்ன விசேஷ பொறுப்புகள் கிடைத்தன?

  • சகோதரர் ஜான்சனுக்கு ஜெபம்தான் எல்லாமே என்று எப்படிச் சொல்ல முடியும்?

  • சகோதரர் ஜான்சனுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?